பொதுவான விதிகள்:
1. ஒரே ஒசையை இரண்டு அல்லது மூன்று வகைகளில் எழுதலாம். தவறில்லை. மென்தமிழில் எழுத்துப்பிழை இல்லை. ஓசையே முக்கியம். ஓசையைக் குறிப்பிட வேண்டிய விதிகளைப் பின்பற்றியிருந்தால் போதும்.
2. ஒரு புதிய ஓசையில் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட குறியீட்டுத் தொகுப்பின் ஓசையில் இருந்து மிக மிக இலேசான வித்தியாசம் இருந்தால், அதே குறியீட்டுத் தொகுப்பைப் பயன்படுத்தலாம்.
3. மென்தமிழ் குறியீடுகளைக் கொண்டு தமிழ் வாக்கியங்களை எழுதினாலும், மென்தமிழ் உச்சரிப்பு விதிகளைப் பின்பற்றவேண்டும். சில சமயம், தமிழ் வாக்கியங்களை தமிழ் இலக்கண விதிப்படி எழுத, மென்தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்த நேரலாம். அவ்வாறு எழுதும்போது, அவ்வாக்கியம் அல்லது பத்தி மென்தமிழ் விதிப்படி எழுதப்படவில்லை என்பதை உணர்த்த ஆச்சரியக்குறியுடன் ஆரம்பித்து எழுதவேண்டும்.
உதாரணம்: ! . .
4. எளிய முறையில் எழுதும்போது மாற்றிகளை அவை சார்ந்த உயிர் அல்லது மெய் எழுத்துக்களோடே இணைத்தும் எழுதலாம், அல்லது எழுத்துக்களின் மேலும் கீழும் எழுதலாம். ஆனால் பொதுவான விதியாக தனித்தனியாக இடமிருந்து வலமாக எழுதவேண்டும்.