உரை பேசுதல்:
பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மென்தமிழ் மிகவும் பயன்படும். மென்தமிழ் எழுத்துக்கள் ஒலி முறைப்படி உருவாக்கப் பட்டுள்ளதால், எழுத்துக்களைத் தட்டும்போதே பேசும்படி மென்பொருளை உருவாக்கலாம். இவ்வாறு பேசுதல், மென்தமிழ் எழுத்துக்களின் ஒலியின்படியோ அல்லது தமிழ் விதிகளின்படியோ இருக்கலாம். இதனை பயனாளர் விருப்பத்தின்படி தேர்வு செய்ய முடியவேண்டும்.
ஏற்கனவே பதிவிடப்பட்ட உரையை படிக்கவும், திருத்தவும், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உரை பேசுதல் (text to speech) வசதி பயன்படும்.
பேச்சறிதல் மற்றும் பேச்சுரை மாற்றுதல்:
பேச்சறிதல் (Speech Recognition) மற்றும் பேச்சுரை மாற்றுதல் (Speech to Text Conversion) பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுவாகவே நவீன திறன்கருவிகளுக்கு (Smart Devices) பேச்சுக் கட்டளைகளை இடப் பயன்படுகிறது. மென்தமிழில் ஒலிகளும் குறியீடுகளும் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளதால், இது எளிதாகிறது. பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு பேச்சறிதல் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேச்சறிதலுக்கான தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மென்தமிழ் மென்பொருள் இத்தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பது அவசியமாகிறது.